Uncategorized

News, Uncategorized

வெசாக் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

வெசாக் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினரின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பலவற்றில் இலக்கத் தகடுகள் பொருத்தப்படாமல் இருந்ததுடன், சைலன்சர்கள் மாற்றியமைக்கப்பட்டு அதிக சத்தம் எழும் வகையில் இயக்கப்பட்டிருந்தன. மேலும், சில வாகனங்கள் பக்கக் கண்ணாடிகள் இன்றி வீதிகளில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் வலயங்களை பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், […]

News, Uncategorized

வவுனியாவில் பயங்கர விபத்து: சொகுசு பேருந்து மோதி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பெரியஉளுக்குளம் பகுதியைச்

News, Uncategorized

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கிக் கணக்கில் வரவு

7 லட்சம் பயனாளிகளுக்கு அரசாங்கம் நிதி விடுவிப்பு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவுகள் நாளை (29) முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் மொத்தமாக சுமார் 3,493,915,000 ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இந்த நிதி சுமார் 7 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 625,128 முதிய பயனாளிகளுக்கு 3,125,600,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம்

News, Uncategorized

பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அவசர அறிவுரை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொகுபிட்டிய பகுதிகள் விழிப்புணர்வு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

News, Uncategorized

நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்வு

நாட்டின் பல பகுதிகளில் நாளை (24) சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

News, Uncategorized

ஹட்டன் – பொகவந்தலாவ வீதியில் விபத்து

பாடசாலை பேருந்தும் பாரவூர்தியும் மோதி மாணவன் காயம் ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சுமார் 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், பிரதேசத்தில் நிலவும் சீரற்ற

News, Uncategorized

யாழ்ப்பாணத்தில் வரதட்சணை கொடுமை: 19 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் வரதட்சணை தொடர்பான அழுத்தங்களால் மனஉளைச்சலுக்கு ஆளான 19 வயது இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த குறித்த யுவதி, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நபரையே நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது கணவரின் தாயார் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில் இருந்ததாகவும், பின்னர் 25 பவுண் தங்க நகை மற்றும் வீடு வரதட்சணையாக கோரி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்

News, Uncategorized

தேசிய தரவுப் பரிமாற்ற மையம் அமைக்க நடவடிக்கை

தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுத்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரச நிறுவனங்களுக்கு இடையில் தரவுகளை பகிர்ந்துகொள்ளும் வசதியை உருவாக்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இந்த புதிய மையம் மூலம் அரச நிறுவனங்கள் இடையே தடையின்றி தரவுப் பரிமாற்றம் செய்ய முடியும் எனவும், இதனால் பொதுமக்கள் சேவைகளை

Local News, News, Uncategorized

இலங்கைக்கு 9.5 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரை மொத்தம் 951,742 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 221,953 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும்

News, Uncategorized

17ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு

வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூர்ந்து இன்று அதிகாலை நந்திக்கடலில் மலர்தூவி மற்றும் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து, முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “எங்கள் வரலாற்றின் வேதனையான

Scroll to Top