
வெசாக் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
வெசாக் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினரின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பலவற்றில் இலக்கத் தகடுகள் பொருத்தப்படாமல் இருந்ததுடன், சைலன்சர்கள் மாற்றியமைக்கப்பட்டு அதிக சத்தம் எழும் வகையில் இயக்கப்பட்டிருந்தன. மேலும், சில வாகனங்கள் பக்கக் கண்ணாடிகள் இன்றி வீதிகளில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் வலயங்களை பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், […]









