Uncategorized

Uncategorized

அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இனி புதன்கிழமைகளில் இயங்கும்

பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை, எதிர்வரும் 8ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித் துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை முன்னர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய நிலைமைகளை முன்னிட்டு, வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழமையானபடி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uncategorized

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாகும். இவ்வருடம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த பரீட்சையில் கலந்து கொண்டு தங்கள் எதிர்கால கல்வி பாதையை நோக்கி முயற்சி செய்துள்ளனர். பெறுபேறுகள் தற்போது ஆன்லைன் மூலம் பார்வையிடக்கூடியதாக உள்ளன. மாணவர்கள் தங்களது குறியீட்டு எண் (Index Number) பயன்படுத்தி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில்

Uncategorized

ஏப்ரல் 1 முதல் மின்சார கட்டணம் உயர்வு

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் படி, மின்சார பயன்பாட்டு அளவினைப் பொறுத்து கட்டண உயர்வு விகிதங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: இதன் அடிப்படையில், கட்டண உயர்வின் பண மதிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது: இந்த கட்டண உயர்வு பொதுமக்களின் வாழ்கைச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Uncategorized

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்க தளங்களை குறிவைத்த ஈரான்

அமெரிக்காவுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு பிராந்திய இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மேற்கொள்ளப்பட்டதாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது. IRGC வெளியிட்ட அறிக்கையில், “உண்மையான வாக்குறுதி 4” (Operation True Promise 4) நடவடிக்கையின் 86வது அலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த பல கட்ட தாக்குதலாகும்; இதில்

Uncategorized

பிரிக்ஸ் மாநாட்டை தவிர்த்ததே தவறா? எரிபொருள் நெருக்கடி குறித்து நாமல் விமர்சனம்

ஜனாதிபதி அவர்கள் பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டிருந்தால், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ரஷ்யாவிடமிருந்து மேலும் விரைவானதும் சிறந்ததுமான ஒத்துழைப்பைப் பெற முடிந்திருக்குமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (28) பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறினார். பிரிக்ஸ் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்திருந்தபோதிலும், ஜனாதிபதி அதில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், ரஷ்ய எரிசக்தி துணை அமைச்சரின் வருகைக்காக காத்திருக்காமல், அங்கு

News, Uncategorized, World News

“போர் முடிவுக்கு நெருங்குகிறது”டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு

அமெரிக்கா, ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரானில் அமெரிக்கா நிர்ணயித்துள்ள முக்கிய ராணுவ இலக்குகளை அடைவதில் “மிகவும் நெருக்கமான” நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கைகளை விரைவில் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா நேரடியாகப் பயன்படுத்துவதில்லை

Local News, News, Uncategorized

வாராந்த எரிபொருள் QR ஒதுக்கீடு – சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவு!

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடு, வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை புதிய வார ஒதுக்கீடு மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. QR முறைமை அறிமுகமானதன் மூலம் நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை சுமார் 20% வரை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன் என பதிவாகியுள்ளது. எரிபொருள் வரிசைகளை முற்றிலும் நீக்குவதே QR

Uncategorized

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு…!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

Uncategorized

இலங்கைக்கு மீண்டும் பெய்லி பாலங்களை அனுப்பியது இந்தியா

இலங்கை டித்வா, புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் புனரமைப்பு பணிகளுக்காக மற்றுமொரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கைக்கு, இந்தியா இன்று (ஜனவரி 31) அனுப்பியது. டித்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்தன. துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க இந்தப் பாலங்கள் உதவும். தற்காலிக இரும்புப் பாலங்கள்  இது குறித்து இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10

Uncategorized

திருகோணமலை முல்லைத்தீவு இடையில் கடலில் நிலநடுக்கம்

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Scroll to Top