
அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இனி புதன்கிழமைகளில் இயங்கும்
பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை, எதிர்வரும் 8ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித் துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை முன்னர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய நிலைமைகளை முன்னிட்டு, வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழமையானபடி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






