Local News

Local News, News

WhatsApp வழி புதிய காணொளி மோசடி: SL CERT அவசர எச்சரிக்கை

இலங்கையர்களை இலக்கு வைத்து நடைபெற்று வரும் புதிய வகை WhatsApp காணொளி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SL CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுவதுடன், அண்மைக் காலங்களில் இதுகுறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் கவர்ச்சிகரமான இளம் பெண்களின் போலி Facebook கணக்குகள் மூலம் முதலில் தொடர்பு கொண்டு, பின்னர் உரையாடலை WhatsApp செயலிக்கு மாற்றுகின்றனர். அதன் பின், அவர்கள் காணொளி அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர். […]

Local News, News

ஜூலை 1க்கு முன் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு கட்டாயம்

நாட்டிலுள்ள அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதிக்குள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் புதிய முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அவற்றை பதிவு செய்திருப்பது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்பள்ளி கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின்படி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Local News, News

வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் குறித்து அதிருப்தி

2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. டினோசன் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அதிகாரிகள் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். ஆசிரியர் இடமாற்றம் தாமதமாகும் நிலையில், அதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர்

Local News, News

அத்துருகிரியவில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள பழைய சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகச் சென்ற உந்துருளி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த 20 வயதுடைய மாணவரும், ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் திருத்தகத்தில் பணிபுரிந்த இளைஞரும் ஆவர். அதிகாலை 2 மணியளவில், அத்துருகிரிய நோக்கி

Local News, News

புதிய VAT வரிக் கொள்கைக்கு சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்

அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய வரி மாற்றங்களின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச் சட்டகத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளதாகவும், நிதிச் சேவைகள் அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும்,

Local News, News

தங்க விலை நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Local News, News

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கை வருகை: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சற்று முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகிறது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Local News, News

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: முச்சக்கர கட்டண உயர்வுக்கு கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்ததாவது, பெற்றோல் விலை ரூ. 12 உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய கட்டண அமைப்பு தொடர முடியாது என்பதால் மாற்றம் அவசியம் என கூறினார். தற்போது மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கர கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது.

Local News, News

வரி மற்றும் டொலர் உயர்வு தாக்கம்: வாகன விலை மேலும் உயரும் அபாயம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டமை மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றம் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபல வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் எனவும்

Local News, News

தேசிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்: நவீன மாற்றங்களுக்கு அரசு நடவடிக்கை

தற்போதைய சமூக மாற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ப சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998 ஆம் ஆண்டு இலக்கம் 50

Scroll to Top