
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு வாய்ப்பு – 11% உயர்வு என தகவல்
கட்டணங்கள் குறைக்கப்படும் என அரசாங்கம் முன்பு அறிவித்திருந்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் காரணமாக சுமார் 18 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சுமையை […]









