
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் நிகழ்வு இன்று (16.05.2026) காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
ரணம் நிறைந்த மே மாத நினைவுகளை தாங்கிய இந்நிகழ்வு, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும் நினைவுகளையும் பகிரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்தை வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் துயரங்களை அனுபவித்த பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன், போரில் உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் நினைவுகூரப்பட்டனர்.
