World News

News, World News

ஈரான்–அமெரிக்க மோதல் தீவிரம்: அரபிக்கடலில் கப்பல் இடைமறிப்பு

அரபிக்கடலில் ஈரானிய “நிழற்கப்பற்படை”யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு கப்பலை அமெரிக்க கடற்படை சனிக்கிழமை வழிமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட அறிக்கையின்படி, சர்வதேச தடைகளை மீறி ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெய் பொருட்களை கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்ட கப்பலே இந்த நடவடிக்கையில் இலக்காகியுள்ளது. “Seven” என அடையாளம் காணப்பட்ட இந்த கப்பல், அமெரிக்கப் படைகளின் உத்தரவின்படி பாதுகாப்புடன் ஈரானை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இடைமறிப்பு, USS Pinckney (DDG-91) […]

News, World News

ஈரானில் இணைய முடக்கம் :ஈரானின் தற்போதைய நிலை

ஈரானில் இணைய சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டு இன்று (26) 58 நாட்கள் கடந்துள்ளதாக இணைய கண்காணிப்பு அமைப்பு NetBlocks தெரிவித்துள்ளது. இந்த நீண்டகால தடங்கல் தற்போது 1,368 மணித்தியாலங்களை கடந்துள்ளது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் இணைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். பின்னர் பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமானதையடுத்து, இந்த கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இணைய முடக்கம்

News, World News

‘XChat’: வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக புதிய மெசேஜிங் செயலி

Elon Musk தலைமையிலான X நிறுவனம், தனது பயனர்களுக்காக ‘XChat’ எனும் புதிய குறுஞ்செய்தி செயலியை iOS சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், பயனர்கள் தங்களது X கணக்கில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி குரல் அழைப்புகள், காணொளி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். ‘எண்ட்-டு-எண்ட்’ என்க்ரிப்ஷன் வசதியுடன் வரும் இந்த செயலி, பாதுகாப்பை முன்னிலைப்படுத்துகிறது. மேலும், விளம்பரங்கள் இல்லாமையும், பயனர்களைக் கண்காணிக்காத தன்மையும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்திகளை திருத்துதல், அழித்தல் மற்றும்

News, World News

ஹோர்முஸ் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்வு

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தொடர்ச்சியான பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையால் மசகு எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் பிரெண்ட் ரக எண்ணெய் விலை 106.80 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது கடந்த புதன்கிழமை பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 சதவீத உயர்வாகும். மேலும், கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது.

News, World News

ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) மூலம் அரசை மாற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், புதிய அரசாங்க மாதிரி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுத் துறைகள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் 50 சதவீதத்தை ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) எனப்படும் தன்னாட்சி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி குறித்து பிரதமர் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தனது ‘X’ சமூக

News, World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர்நிறுத்தம்: முழுமையான அமைதிக்கு இன்னும் சந்தேகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாக கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், லெபனான் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் இஸ்ரேல் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய

News, World News

சர்வதேச சந்தையில் தங்க விலையில் சிறிய சரிவு

சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்றைய 4,734.42 டொலருடன் ஒப்பிடுகையில் குறைவாகும். அதேவேளை, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.66 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

News, World News

ஈரானில் மீண்டும் வானூர்தி சேவைகள் ஆரம்பம் – 50 நாட்களுக்குப் பின் விமானப் போக்குவரத்து இயக்கம்

போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முதற்கட்டமாக தெஹ்ரான் (Tehran) மற்றும் மஷாத் (Mashhad) நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதே நாளில் திரும்பும் விமானச் சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த உள்நாட்டு விமான

News, World News

அமெரிக்க கடற்படை முற்றுகை காரணமாக ஈரானுக்கு கடும் பொருளாதார தாக்கம்

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையால் ஈரானுக்கு தினமும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவிலிருந்து (Kharg Island) எண்ணெய் ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யவும் முடியாமல் நாடு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, World News

தமிழக தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்குமாறு விஜய் அவசர கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்)

Scroll to Top