
சஹாரா பாலைவனத்தில் சிக்கிய பாரவூர்தி: தாகத்தால் 49 பேர் உயிரிழப்பு
மாலியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்று தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நைஜர் நாட்டுப் பிரஜைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று சஹாரா பாலைவனத்தில் பழுதடைந்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்த 49 பேர் தாகம் மற்றும் கடும் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். நைஜர்–அல்ஜீரியா எல்லையில் அமைந்துள்ள முக்கிய எல்லைக் கடவையான அசாமாகாவுக்கு மேற்கே சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரவூர்தி பழுதடைந்ததைத் தொடர்ந்து பயணிகள் பாலைவனத்தின் நடுவே சிக்கிக்கொண்ட நிலையில், கடும் […]









