World News

News, World News

“பாடசாலைகளில் போன் பயன்படுத்தினால்? இனி கடும் சட்ட நடவடிக்கை!”

இங்கிலாந்தில் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு, இனி சட்டமாக மாற்றப்பட உள்ளது. ‘சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம்’ தடையின்றி நிறைவேற்றப்படுவதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களும், சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித், பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், பாடசாலை […]

News, World News

முடிவை தீர்மானிக்கும் நாள்: தமிழக சட்டசபை தேர்தல் நாளை ஆரம்பம்!

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில், சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்

News, World News

அமெரிக்கா – ஈரான் இடையில் புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை (22) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன. மறுபுறம், இந்த பேச்சுவார்த்தையில்  ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில்

News, World News

போர் பதற்றம் தீவிரம்: ஹோர்முஸ் நீரிணை கப்பல் விவகாரம் – அமெரிக்க பேச்சுக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை

News, World News

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சர்வதேச சந்தையில் அதிரடி ஏற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றமான நிலையும் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (19) குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,831.23 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் 80.83 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு உலக அரசியல் சூழ்நிலைகளும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில்

News, World News

எச்-1பி விசாவில் பெரிய மாற்றம்: கட்டண உயர்வால் விண்ணப்பங்கள் குறைவு

அமெரிக்காவின் எச்-1பி (H-1B) விசா திட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. விசா கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 90 லட்சமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எச்-1பி விசா ஆண்டுதோறும் 85,000 பேருக்கு வழங்கப்படுகிறது. முன்பாக இந்த விசாவிற்கான தேர்வு லொட்டரி முறையில் நடைபெற்றாலும், புதிய விதிகளின் கீழ் உயர் ஊதிய வேலைகளுக்குத் தகுதியானவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, லொட்டரி முறையில் சிலருக்கு பல முறை வாய்ப்பு

News, World News

மெட்டாவில் பெரிய அளவில் பணிநீக்கம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

Meta நிறுவனம் இந்த ஆண்டுக்கான தனது முதல் கட்ட பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கையை மே 20ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக, உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேரை — கணக்கில் சுமார் 8,000 ஊழியர்களை — பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் கூடுதல் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான திகதிகள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு: கப்பல்களை குறிவைத்ததாக ஈரான் மீது குற்றச்சாட்டு

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் சில வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈரானிய புரட்சிகர காவற்படை தொடர்புடையதாக கூறப்படுகிறது. பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவு (UKMTO) தெரிவித்ததாவது, ஓமானின் வடகிழக்கில் சுமார் 20 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை, ஈரானிய அதிவேகப் படகுகள் அணுகியுள்ளன. எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி கப்பலை

News, Uncategorized, World News

அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி: ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடும் கட்டுப்பாடு

மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர்ச்சியான கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் அரச ஊடகமான IRIB வெளியிட்ட தகவலின்படி, ‘முற்றுகை’ என்ற பெயரில் அமெரிக்கா கடல்சார் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது என ஈரானிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரானின் ஆயுதப்படைகளின்

News, World News

இலங்கை மசகு எண்ணெய் விலை விவகாரம்: HSBC CEO கருத்து உறுதி – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு கொள்வனவாளர் பீப்பாய் ஒன்றுக்கு 286 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக லண்டனிலுள்ள HSBC தலைமையக ஊடகப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டபோது, CEO வெளியிட்ட கருத்து உண்மையென அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் விளக்கமளித்தபடி, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய்

Scroll to Top