
“பாடசாலைகளில் போன் பயன்படுத்தினால்? இனி கடும் சட்ட நடவடிக்கை!”
இங்கிலாந்தில் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு, இனி சட்டமாக மாற்றப்பட உள்ளது. ‘சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம்’ தடையின்றி நிறைவேற்றப்படுவதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களும், சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித், பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், பாடசாலை […]









