News

Local News, News

போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – யாழ். அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்: போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அரச துறையினர் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத்தியுள்ளார். புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (21) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு […]

Local News, News

காவல்துறை பெயரில் சமூக வலைத்தள மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கொழும்பு: காவல்துறை அதிகாரிகளின் பெயர், புகைப்படம் மற்றும் போலி அடையாளங்களை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறைத் தலைமையகம் எச்சரித்துள்ளது. காவல்துறையினரின் புகைப்படங்களை பயன்படுத்தி, குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில் போலி கணக்குகள் உருவாக்கி, குழுக்களாக இணைந்து நிதி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

News, Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை: இன்று பிற்பகல் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு

கொழும்பு, ஜூலை 23: நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை நேரத்தில் லேசான மழை

Astrology, News

வார ராசி பலன் ஜூலை 20 முதல் 26, 2026

இந்த வாரத்தில் ஜூலை 24 ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பதால் பத்ர யோகம் உருவாகிறது. கடத்தில் சூரியனும், குருவும் சேர்ந்தும், சிம்மத்தில் சுக்கிரன், கேது கிரகங்கள் சேர்ந்து சஞ்சாரம் செய்து வருகின்றனர். கிரகங்களின் பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கு எப்பட்டிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். ஜூலை 20 முதல் 26 வரையிலான இந்த வார காலத்தில் புதன், சந்திர கிரகங்களின் நகர்வுகள் நடக்கின்றன. ஜூலை

News, World News

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர்

பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார் மன்னர் சார்ள்ஸ் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது பதவியை உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்த அவர், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு (First Lord of the Treasury) பதவிகளில் இருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்தார். அதனை மன்னர் ஏற்றுக்கொண்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சர் கெய்ர் ஸ்டார்மர் இன்று காலை

Local News, News

தரம் 6 மாணவர்கள் 22 பேர் மருத்துவமனையில் அனுமதி – நச்சு விதை காரணமா?

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் விதைகளை உட்கொண்டதால் சுகவீனமடைந்த 22 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் சூரியன் தெரிவித்ததன்படி, தரம் 6-இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆமணக்கு விதைகளை உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் கந்தளாய் பேராறு பகுதியைச்

News, World News

‘Nudify’ செயலிகளுக்கு எதிராக அப்பிள், கூகுளுக்கு உத்தரவு

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி அலுவலகம், நிழற்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட ‘Nudify’ செயலிகளை தங்களது செயலி அங்காடிகளில் இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. காலிஃபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி டீப்ஃபேக் (Deepfake) ஆபாசப் படங்களை உருவாக்குவது அல்லது அதனை ஊக்குவிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், இவ்வாறான செயல்களால் பாதிக்கப்படுபவர்கள்

Local News, News

காவல்துறை ஆணைக்குழுவில் வெற்றிடங்கள் – தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரல்

ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அரசியலமைப்புப் பேரவை அறிவிப்பு தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போது நிலவும் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்புப் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான பரிசீலனைக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பங்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் “Recommendation for Appointment as a Member of the National Police Commission” என்ற விரைவு

Local News, News

இன்றைய தங்க விலை: 24 கரட் பவுண் ரூ.376,000 ஆக நீடிப்பு

22 கரட் பவுண் ரூ.346,000 – விலையில் மாற்றமில்லை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (20) தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை. நேற்று முன்தினம் (18) பதிவான விலையே இன்றும் தொடர்கிறது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,000 ரூபாயாகவும்,

News, Uncategorized

ஐந்து மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கை

பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வளிமண்டலவியல் திணைக்களம் கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை சில இடங்களில் “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துதல், நாளின் மிகவும் வெப்பமான நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச்

Scroll to Top