News

News, World News

உலக சந்தையில் எண்ணெய் விலை திடீர் உயர்வு : விநியோக அச்சம் அதிகரிப்பு

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. பிரெண்ட் வகை எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ  WTI வகை எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமாக, உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களும், விநியோக குறைபாடுகள் குறித்த அச்சங்களும் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Astrology, News

இன்றைய ராசி பலன் 29 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 29, 2026 புதன் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, கன்னி ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். மீனத்தில் புதன், செவ்வாய், சனி ஆகிய கிரக சேர்க்கையால் திரிகிரகி யோகம் ஏற்படும் நாள். இன்று கும்ப ராசியில் உள்ள அவிட்டம் பின்பு சதயம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஏப்ரல் 29, 2026 சித்திரை மாதம் 16ம் தேதி புதன் கிழமை, கன்னி ராசியில்

Cinema, News

டொக்சிக்” மீண்டும் தள்ளிவைப்பு: யஷ் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

யஷ் நடிப்பில், Geetu Mohandas இயக்கத்தில் உருவாகி வரும் Toxic திரைப்படம் மீண்டும் தாமதமாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மொழிகளில் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் முதலில் மார்ச் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் தற்போது, ஜூன் மாதத்திலும் படம் வெளியாகாது

News, Uncategorized

தங்க விலையில் திடீர் சரிவு: இன்றைய விலை வீழ்ச்சி விவரம்

இலங்கை சந்தையில் இன்று (ஏப்ரல் 29, 2026) தங்கத்தின் விலையில் கணிசமான குறைவு பதிவாகியுள்ளது என All Ceylon Jewellery Traders Association தெரிவித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அது 3,000 ரூபாயால் குறைந்து 392,000 ரூபாயாகியுள்ளது. அதேபோல், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22

News, World News

ஹோர்முஸ் நீரிணை மூடல் விளைவு – உலக கப்பல்கள் பனாமா நோக்கி திருப்பம்

ஈரான் தொடர்பான போர் நிலைமையின் தாக்கத்தால், பனாமா கால்வாய் வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த முக்கிய நீர்வழியில், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை தொடரும் வரை இந்த அதிகரிப்பு நீடிக்கும் என விக்டர் வியல் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள்

News, World News

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: இந்திய விமான சேவைகள் முடங்கும் அபாயம்!

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட்  ஆகிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வானூர்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு, நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறை தற்போது “தீவிர அழுத்தத்தில்” இருப்பதாக எச்சரித்துள்ளது. சில விமான நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ஆம் திகதி நடைபெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்பாக அவசர நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெயை வானூர்தி எரிபொருளாக சுத்திகரிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் பெரிதும் உயர்ந்துள்ளதால், எரிபொருள்

Local News, News

வீதி அபிவிருத்தி அதிகாரசபை சர்ச்சை: மீளப் பெறப்படாத மில்லியன்கள் இன்னும் நிலுவை

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தவறான பணப்பரிமாற்றங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வங்கி முன்னெடுத்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நலிந்த ஜயதிஸ்ஸ, வங்கிப் பணப்பரிமாற்றக் கோப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாகவே இந்த இரட்டை கொடுப்பனவுகள் நிகழ்ந்ததாக விளக்கமளித்தார். மேலும், இந்த தவறால் அதிகாரசபையின் கணக்குகளுக்கோ அல்லது தனிப்பட்ட கணக்குகளுக்கோ நேரடி பாதிப்பு ஏற்படவில்லை

News, Sports News

ராஜஸ்தானின் இளம் நட்சத்திரம் ஐபிஎலில் புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி

நடப்பு Indian Premier League தொடரில் Rajasthan Royals அணியின் இளம் வீரர் Vaibhav Suryavanshi தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். Punjab Kings அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, Prabhsimran Singh மற்றும் Marcus Stoinis ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20

Local News, News

இன்று மரக்கறி விலைகள் உயர்வு: வவுனியா சந்தையில் புதிய மாற்றங்கள்

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (ஏப்ரல் 29) மரக்கறிகள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் மொத்த விற்பனை விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 260 ரூபாவாகவும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 145 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் (இந்தியா) 150 ரூபாவாகவும், சின்ன வெங்காயம் 250 ரூபாவாகவும் உள்ளது. மேலும், கரட் 280 ரூபாவாகவும், லீக்ஸ் 200 ரூபாவாகவும், தக்காளி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. போஞ்சி கிலோ ஒன்று

Local News, News

இந்திய கடலில் இலங்கை நபர் மீது தாக்குதல்: உண்மை என்ன? கடற்படை விசாரணை தொடக்கம்

இந்திய கடல் எல்லையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையில் கடற்றொழிலாளர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த நோக்கத்திற்காக இந்திய கடல் எல்லைக்குள் சென்றனர் என்பதையும் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவில் இலங்கை நபர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை கடற்றொழில்

Scroll to Top