
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்லவத்த, தித்தகல்ல பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், குறித்த இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, அவர் தனது வயலில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
