
சிங்கப்பூரில் விசா காலம் மீறி தங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை
சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, விசா அல்லது தங்குமதி அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என எச்சரித்துள்ளது. அந்த அறிவிப்பில், சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை (ICA) அமுல்படுத்தும் சட்டங்களின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம். மேலும் அபராதங்கள், கடுமையான […]









