May 2026

Local News, News, Uncategorized

இலங்கைக்கு 9.5 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 950,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1 முதல் மே 17 வரை மொத்தம் 951,742 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 221,953 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் […]

News, World News

பசியால் குழந்தைகளை விற்கும் அவலம்: ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் மனிதாபிமான நெருக்கடி

தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் குறைவு காரணமாக, மக்கள் பசியின் கொடுமையில் தங்களது குழந்தைகளையே விற்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சுமார் 4.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோர் மாகாணத்தில் தினமும் வேலை தேடி நூற்றுக்கணக்கானோர்

Local News, News

சந்தையில் நாடு நெல்லின் விலை கடும் வீழ்ச்சி

சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை குறைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. உள்நாட்டு கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக வெளிநாடுகளில் இருந்து கீரி சம்பா அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த மாதம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதன் விளைவாக,

Local News, News

பால் மாவின் விலை திடீர் உயர்வு! மக்களுக்கு அவசர அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வந்தவுடன் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 125 ரூபாவாலும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் உயர்ந்துள்ளமை இந்த விலை அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

News, World News

தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு : நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (18) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,545.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு 76.53 டொலராக உயர்ந்துள்ளது. உள்நாட்டு சந்தையிலும் விலை உயர்வு சாத்தியம் கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போதைய சர்வதேச விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும்

Astrology, News

இன்றைய ராசி பலன் 18 மே 2026

இன்று மே 18, 2026 திங்கட் கிழமை, பராபவ வருடம், வைகாசி மாதம் 04ம் தேதி, ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று ரிஷபத்தில் மூன்று கிரக சேர்க்கை யோகம் உருவாகிறது. இன்று துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று மே 18, 2026 வைகாசி மாதம் 04ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க

News, World News

அமெரிக்க விமானக் கண்காட்சியில் நடுவானில் போர்விமானங்கள் மோதல்

அமெரிக்காவில் இடம்பெற்ற விமானக் கண்காட்சியின் போது, நடுவானில் இரண்டு போர்விமானங்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து EA-18G Growler ரக விமானங்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றதாக அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கண்காட்சி நிகழ்வுகள் உடனடியாக இரத்து ஐடஹோ மாநிலத்தின் மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திலிருந்து சுமார் 3.2 கி.மீ தொலைவில் நடந்த இந்த சம்பவத்தைத்

News, World News

“காலம் கடந்து கொண்டிருக்கிறது” : ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ள நிலையில், “காலம் கடந்து கொண்டிருக்கிறது” என டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது எனவும், “காலம் மிகவும் முக்கியமானது” எனவும் வலியுறுத்தியுள்ளார். நெதன்யாகுவுடன் பேச்சுக்குப் பிறகு வெளியான எச்சரிக்கை இந்த கருத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு

News, World News

ஈரானை விட்டு காசாவை நோக்கிய இஸ்ரேல் கவனம் : போர் வியூக மாற்றம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ தரப்புகள் தெரிவித்துள்ளன. காசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கான் யூனிஸ் நகரில் உள்ள காவல் நிலையம் அருகிலும், தற்காலிக முகாம்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுததாரி ஒருவரை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், டெய்ர் அல் பாலாஹ் பகுதியில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு அருகிலுள்ள சமூக

Local News, News

சீரற்ற காலநிலை பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகள், விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை ஊடாக வழங்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பயிர்ச்சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது சேத விவரங்களை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் விவசாய நிலங்கள்

Scroll to Top