
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடர்வதற்காக, மேலும் ஒரு டீசல் கப்பல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது, வரவுள்ள கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் மற்றொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பலில் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]









