News

Local News, News

சுற்றுலாத்துறையில் எழுச்சி: இலங்கைக்கு இந்திய பயணிகள் அதிக வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 809,595 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். மேலும், இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 68,961 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவற்றில் அதிகபட்சமான 19,822 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலை, இலங்கையின் […]

News, World News

மெட்டாவில் பெரிய அளவில் பணிநீக்கம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

Meta நிறுவனம் இந்த ஆண்டுக்கான தனது முதல் கட்ட பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கையை மே 20ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக, உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10% பேரை — கணக்கில் சுமார் 8,000 ஊழியர்களை — பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் கூடுதல் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான திகதிகள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

News, World News

ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு: கப்பல்களை குறிவைத்ததாக ஈரான் மீது குற்றச்சாட்டு

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் சில வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈரானிய புரட்சிகர காவற்படை தொடர்புடையதாக கூறப்படுகிறது. பிரித்தானிய கடல்சார் வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவு (UKMTO) தெரிவித்ததாவது, ஓமானின் வடகிழக்கில் சுமார் 20 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை, ஈரானிய அதிவேகப் படகுகள் அணுகியுள்ளன. எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி கப்பலை

News, Uncategorized, World News

அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி: ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடும் கட்டுப்பாடு

மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர்ச்சியான கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் அரச ஊடகமான IRIB வெளியிட்ட தகவலின்படி, ‘முற்றுகை’ என்ற பெயரில் அமெரிக்கா கடல்சார் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது என ஈரானிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரானின் ஆயுதப்படைகளின்

Local News, News

லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மே மாதத்திலும் விநியோகம் தடையின்றி நடைபெறும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே 20,500 மெட்ரிக் டொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் டொன் விரைவில் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் நிலைத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, 20,000 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய பெரிய கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடையத் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Local News, News

இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இலங்கை வருகை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள இந்திய துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை

News, World News

இலங்கை மசகு எண்ணெய் விலை விவகாரம்: HSBC CEO கருத்து உறுதி – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த ஒரு கொள்வனவாளர் பீப்பாய் ஒன்றுக்கு 286 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக லண்டனிலுள்ள HSBC தலைமையக ஊடகப் பிரிவிடம் விசாரிக்கப்பட்டபோது, CEO வெளியிட்ட கருத்து உண்மையென அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் விளக்கமளித்தபடி, மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய்

Cinema, News

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்களை பட்டியலிட்டால் அதில் 4 சன் டிவியின் தொடர்கள் தான் இருக்கும். மேலும் எல்லா சேனல்களும் புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சன் டிவியிலும் பழைய சீரியல்கள் முடிக்கப்பட்டு புது தொடர்கள் வர இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் புனிதா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கிளைமாக்ஸ் எபிசோடு விரைவில் வர இருக்கிறதாம்.

Cinema, News

நாளுக்கு நாள் வசூல் வேட்டை – பிரதீப்பின்‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பாக்ஸ் ஆபிஸ் அதிரடி!

பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக கலக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படம் தயாராகி கடந்த ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு என படம் முழுவதும் செம்ம என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது, குறிப்பாக வார

Cinema, News

ஜனநாயகன்’ படம் லீக்: பின்னணி உண்மை என்ன? காவல்துறை விளக்கம்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் தொடர்பாக காவல்துறை முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்பட கசிவு தொடர்பாக கடந்த 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய சந்தேகநபர்கள் தமிழ்நாடு இணையவழி குற்றப் பிரிவினரால் கைது

Scroll to Top