Local News

Local News, News

இந்திய கடலில் இலங்கை நபர் மீது தாக்குதல்: உண்மை என்ன? கடற்படை விசாரணை தொடக்கம்

இந்திய கடல் எல்லையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையில் கடற்றொழிலாளர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த நோக்கத்திற்காக இந்திய கடல் எல்லைக்குள் சென்றனர் என்பதையும் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவில் இலங்கை நபர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை கடற்றொழில் […]

Local News, News

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் நிலவரம் – புதிய நாணய மாற்று விகிதங்கள் வெளியீடு

இலங்கை ரூபாவிற்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (27.04.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.5714 ரூபாவாகவும், விற்பனை விலை 322.2761 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேநேரம், சுவிஸ் பிராங்கின் கொள்வனவு விலை 397.90 ரூபாவாகவும், விற்பனை விலை 413.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்வனவு விலை 424.65 ரூபாவாகவும், விற்பனை விலை 437.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Local News, News

வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்ற தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானம் – தாமதங்கள் ஏற்படும் சாத்தியம்

தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் ‘சாகரிகா’ தொடருந்து தடம் புரண்ட சம்பவத்தையடுத்து, அதில் தொடர்புடைய நான்கு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “சாகரிகா தொடருந்து தடம் புரண்டதற்காக சாரதி உள்ளிட்ட

Local News, News

கொழும்பில் நாளை அமுல்படுத்தப்படும் விசேட போக்குவரத்து ஒழுங்கு திட்டம்”

கொழும்பு நகரில் நாளை (28) நடைபெறவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்’ நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல முக்கிய பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வு, மாலை 4.00 மணிக்கு கொழும்பு 07 அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையவுள்ளது. நிகழ்வை முன்னிட்டு, நாளை காலை 11.00 மணி முதல் நிலைமையைப் பொறுத்து பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவோ அல்லது மாற்றி விடப்படவோ வாய்ப்புள்ளதாக காவல்துறை

Local News, News

டீசல் இறக்குமதியில் மோசடி? – அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு என குற்றச்சாட்டு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மேற்கொண்ட டீசல் இறக்குமதி செயல்முறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, குறித்த இறக்குமதி செயல்முறையில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. முறைப்பாட்டில், டீசல் இறக்குமதி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்து முழுமையான விசாரணை

Local News, News

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் பெண்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வரும் 29 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு இணங்க, அவர் இன்று காலை இளவாலை காவல்நிலையத்தில் முன்னிலையாகியபோது கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Local News, News

300க்கும் மேற்பட்ட போத்தல்கள் பறிமுதல்: இரு இடங்களில் சோதனை

ஹொரண மற்றும் நீர்கொழும்பு காவல்துறைப் பிரிவுகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், பெருமளவு சட்டவிரோத மதுபானங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஹொரண காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பெல்பொல வத்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 187.5 லீற்றர் (சுமார் 250 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹொரண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நீர்கொழும்பு

Local News, News

மீண்டும் கட்டண உயர்வு வருமா? மின்சார சபை நிதிநிலை சிக்கலில்

பலமுறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டிருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 38.7 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டில் நிலவிய வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் அதிக செலவு கொண்ட வெப்ப மின் உற்பத்தியை அதிகமாக நம்பியிருப்பதே இந்த நட்டத்திற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 காலப்பகுதியில் மின்சாரக் கட்டணங்களில் பல

Local News, News

பொருளாதாரம் மீளுகிறதா? வாகன இறக்குமதியில் இலங்கை புதிய உச்சம்

இலங்கையின் 2025 ஆம் ஆண்டிற்கான வாகன இறக்குமதி செலவு, நாட்டின் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் 2025 பொருளாதார மீளாய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நீண்டகாலமாக அமலில் இருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி மாதத்திலேயே தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதன் பின்னர், பல ஆண்டுகளாக தேங்கியிருந்த தேவைகள் (Pent-up demand) மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மீளுருச்சி காரணமாக

Local News, News

பறங்கியர் சமூகத்தில் ஆங்கில அறிவு குறைவு: புதிய தரவுகள் கவனம் ஈர்ப்பு

இலங்கையின் அண்மைய தொகைமதிப்பு தரவுகள், நாட்டின் மொத்த மொழியறிவு மட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன. இருப்பினும், பறங்கியர் சமூகத்தினரிடையே ஆங்கில மொழியறிவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி முக்கிய கவலையாக மாறியுள்ளது. 2012 முதல் 2024 வரை இலங்கையின் மொத்த ஆங்கில மொழியறிவு 30.8% இலிருந்து 57.3% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலப்பகுதியில் பறங்கியர் சமூகத்தில் ஆங்கில அறிவு 97.4% இலிருந்து 79.3% ஆகக் குறைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், அந்த சமூகத்தில் சிங்கள

Scroll to Top