
மீண்டும் கட்டண உயர்வு வருமா? மின்சார சபை நிதிநிலை சிக்கலில்
பலமுறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டிருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 38.7 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டில் நிலவிய வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் அதிக செலவு கொண்ட வெப்ப மின் உற்பத்தியை அதிகமாக நம்பியிருப்பதே இந்த நட்டத்திற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 காலப்பகுதியில் மின்சாரக் கட்டணங்களில் பல […]









