April 2026

Local News, News

இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டவர் விவகாரம்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்

நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடிய நபர் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. போலியான நபர்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திருச்சபை கேட்டுக் கொண்டுள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் போன்ற உடை மற்றும் தோற்றத்தில் நீர்கொழும்பின் பல பகுதிகளில் சென்றுள்ளார். அவர் […]

News, Sports News

CSKக்கு பெரிய பின்னடைவு – முக்கிய வீரர் தொடரை விட்டு வெளியேறினார்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹ்மத் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது ‘கிரேட் 2’  (Grade 2) வகையைச் சேர்ந்த தசை கிழிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை

News, Sports News

மைதானத்தில் நடந்தது என்ன?– RCB மீது CSK அதிரடி நடவடிக்கை

நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)யிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது. இந்த முறைப்பாடு, ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியைச் சுற்றி உள்ளது. போட்டியின் போது, மைதான டிஜே மூலம் “தோசை… இட்லி… சாம்பார்… சட்னி…” என்ற வரிகள் கொண்ட பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது. இது

News, Uncategorized

இன்று ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்

கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (17) பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு பத்தரமுல்லாவில் அமைந்துள்ள தலைமையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்று சேவைகள் வழங்கப்படமாட்டாது. இன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், விரைவில் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

Astrology, News

இன்றைய ராசி பலன் 17 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 17, 2026 சித்திரை மாதம் 04ம் தேதி வெள்ளிக் கிழமை, மீனம், மேஷ ராசியில் ரேவதி பின் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மேஷத்தில் சந்திரன் – சூரியன் – சுக்கிரன் என திரிகிரகி யோகம் உருவாகிறது. இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சர்வ அமாவாசை. இன்று ஏப்ரல் 17, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 04ம்

Local News, News

களனி ஆற்றில் சோக அனர்த்தம்: நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

கித்துல்கல பகுதியில் அமைந்துள்ள களனி ஆறு இல் நீராடச் சென்ற 46 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஹட்டன் – மொரஹேனகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவலின்படி, குறித்த நபர் தனது உறவினர்களுடன் நேற்று (15) சுற்றுலா சென்றிருந்தபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்ததையடுத்து, Sri Lanka Police மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)

Local News, News

எரிபொருள் விலை 3 மடங்கு உயருமா? இலங்கைக்கு அதிர்ச்சி தகவல் வெளியீடு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யை சுமார் 286 அமெரிக்க டொலர் வரை கொடுத்து கொள்வனவு செய்திருக்கலாம் என HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெடரி தெரிவித்துள்ளார்.ஹொங்கொங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய ஊடகங்களில் மசகு எண்ணெய்யின் விலை 100 முதல் 110 டொலர் வரை இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆசிய நாடுகளுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய்யின்

Local News, News

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: புத்தாண்டுக்கு பின் மீண்டும் விநியோகம்

புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை

Local News, News

மீண்டும் நகருக்கு மக்கள் திரும்பல் – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று (15) பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி–பின்னதுவ நுழைவாயிலில் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் அவ்வப்போது நெரிசல் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இன்று முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக

News, World News

டைட்டானிக் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று – ஆழ்கடலில் உறங்கும் மறக்க முடியாத வரலாறு

வரலாற்றில் ஆழமான சோகத்தை ஏற்படுத்திய R.M.S டைட்டானிக் கப்பல் விபத்தின் 114-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1912 ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக், அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்தனர். “மூழ்கவே முடியாத கப்பல்” என அழைக்கப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளானது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி,

Scroll to Top