
எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டீசல் மற்றும் பெட்ரோல் மீதான தற்போதைய மானிய விலையிலேயே விநியோகம் தொடரவுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்துள்ளதா என […]









