
மீண்டும் நகருக்கு மக்கள் திரும்பல் – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று (15) பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி–பின்னதுவ நுழைவாயிலில் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் அவ்வப்போது நெரிசல் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இன்று முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக […]









