Local News

Local News, News

சந்தையில் நாடு நெல்லின் விலை கடும் வீழ்ச்சி

சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை குறைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. உள்நாட்டு கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக வெளிநாடுகளில் இருந்து கீரி சம்பா அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த மாதம் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதன் விளைவாக, […]

Local News, News

பால் மாவின் விலை திடீர் உயர்வு! மக்களுக்கு அவசர அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வந்தவுடன் 400 கிராம் பால் மா பொதியின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 125 ரூபாவாலும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் உயர்ந்துள்ளமை இந்த விலை அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

Local News, News

சீரற்ற காலநிலை பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகள், விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை ஊடாக வழங்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பயிர்ச்சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது சேத விவரங்களை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் விவசாய நிலங்கள்

Local News, News

சிங்கப்பூரில் விசா காலம் மீறி தங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை

சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, விசா அல்லது தங்குமதி அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என எச்சரித்துள்ளது. அந்த அறிவிப்பில், சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை (ICA) அமுல்படுத்தும் சட்டங்களின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம். மேலும் அபராதங்கள், கடுமையான

Local News, News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முதலமைச்சர்விஜய் வெளியிட்ட முக்கிய அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக அரசியல் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தமிழகம் என்றும் இணைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி கோரிக்கைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் வேதனையான வரலாற்றை

Local News, News

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது படிப்படியாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் குறைந்து வருவதாகவும், அண்மைய வானிலை பகுப்பாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்கும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளுக்கும் இனி இந்த வளிமண்டலத் தொகுதியால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள்

Local News, News

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடிய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்று (17) நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரை தொடர்ந்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மற்றுமொரு இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Local News, News

உர மானியம் கோரி கொழும்பை முற்றுகையிட விவசாயிகள் எச்சரிக்கை

உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்காவிட்டால், கொழும்பில் பாரிய அளவிலான சிவில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என கலன்பிந்துணுவெவ, துடுவல பரணகம கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு எச்சரித்துள்ளது. சந்தையில் தற்போது உர விநியோகம் மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபாவிலிருந்து 18,500 ரூபா வரை உயர்ந்துள்ளதால், இப்போகப் பயிர்ச்செய்கையை தொடர்வதில் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள்

Local News, News

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் (Amber) நிற அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாட்டிற்கு வடகிழக்குத் திசையில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே இடத்தில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின்

Local News, News

களனி – வனவாசலுக்கு இடையில் தொடருந்து பெட்டி தடம் புரண்டு விபத்து

களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற விபத்தில் தொடருந்து பெட்டி ஒன்று தடம் புரண்டு கவிழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளான 10 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அந்தப் பாதையில் இயங்கிய தொடருந்து சேவைகளில் தற்காலிக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட தொடருந்து பெட்டியை மீட்கும் பணிகளில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Scroll to Top