April 2026

Local News, News

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வணிக விசாவில் இலங்கைக்கு வந்து அதன் காலம் முடிந்தபின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர். Negombo பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 47 பேர்  சீனநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள மூவர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றிய மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தொடர்ந்து […]

Local News, News

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிகளில் செலுத்தல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் நாளை (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி பெற்ற பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் நாளை முதல் இந்த தொகைகளைப் பெற முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Cinema, News

இலங்கைக்கு திடீர் வருகை தந்த சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி – ரசிகர்கள் உற்சாகத்தில்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் நடிகர்-இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இன்று திடீரென இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்த இந்த பயணம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நோக்கம் குறித்து இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவர்கள் Colombo நகரில் உள்ள ஒரு நட்சத்திர தரமான ஹோட்டலில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில்

News, World News

போர் பதற்றம் தீவிரம்: ஹோர்முஸ் நீரிணை கப்பல் விவகாரம் – அமெரிக்க பேச்சுக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. ‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை

Local News, News

விக்டோரியா நீர்த்தேக்க நீர் வீணாகிறதா? – குற்றச்சாட்டுகளை மறுத்த நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றி வருவதாக தேசிய விவசாய ஒருமைப்பாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தேசிய விவசாய ஒருமைப்பாட்டின் தலைவர் அநுராத தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க வேண்டிய நிலையில், அதிகாரிகள் குறுகிய கால நோக்கத்துடன் நீரை வீணடித்து வருவதாக தெரிவித்தார். விவசாய தேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலிலும், குளங்களில்

Astrology, News

இன்றைய ராசி பலன் 20 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 20, 2026 திங்கட் கிழமை, பங்குனி மாதம் 07ம் தேதி, ரிஷபம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். மீனத்தில் சனி, புதன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கிறது. துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று 20 ​ஏப்ரல் 2026 பங்குனி மாதம் 07ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் கிருத்திகை பின் ரோகிணி நட்சத்திரத்தில்

Local News, News

பூக்கள் அல்ல… தோட்டத்தின் அழகே வருமானம்! – வைரலாகும் விவசாயியின் ஐடியா

சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், தனது தோட்டத்தின் இயற்கை அழகையே வருமானமாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவர் தனது நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தார். தற்போது தோட்டம் முழுவதும் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களால் காட்சியளித்தாலும், சந்தையில் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூக்களை குறைந்த விலையில் விற்பனை செய்து நஷ்டமடைவதை

News, Uncategorized

தமிழர்களின் நலனில் இந்தியா உறுதி – நுவரெலியாவில் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று நுவரெலியா – ராகலை பகுதியில் அமைந்துள்ள லிட்டஸ்டேல் பெருந்தோட்டத்திற்கு விஜயம் செய்தார். அங்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட அவர், பயனாளிகளுடனும் நேரடியாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது இந்திய வம்சாவளி தமிழ் மக்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் மற்றும்

Local News, News

கட்டுமானத் துறையில் ஆள் பற்றாக்குறை – 10,000 இளைஞர்களுக்கு அரசு பயிற்சி திட்டம்!

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 10,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் டி.பி. சரத், கட்டுமான நிறுவனங்களுடன் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், “கட்டுமானப் பணியாளர்” என்ற பதவியை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக தரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தற்போது இந்தத் துறையில் சுமார்

News, Sports News

ஐபிஎல் மைதானத்தில் ‘சூனிய’ சர்ச்சை? – எலுமிச்சை காணொளி வைரல்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், போட்டிக்குப் பிறகு மைதானத்தில் பதிவான ஒரு காணொளி புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. அந்தக் காணொளியில், ஐதராபாத் அணியின் ரசிகர் ஒருவர் கையில் எலுமிச்சை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு சடங்கு செய்வது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை சிலர் ‘சூனியம்’ எனக் கூறி, சிஎஸ்கே வீரர்களின் விக்கெட்டுகளை பாதிக்க முயற்சி என

Scroll to Top