April 2026

News, World News

ஈரானில் மீண்டும் வானூர்தி சேவைகள் ஆரம்பம் – 50 நாட்களுக்குப் பின் விமானப் போக்குவரத்து இயக்கம்

போர்ச் சூழல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு வானூர்தி சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, முதற்கட்டமாக தெஹ்ரான் (Tehran) மற்றும் மஷாத் (Mashhad) நகரங்களுக்கு இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. அதே நாளில் திரும்பும் விமானச் சேவைகளும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த உள்நாட்டு விமான […]

News, World News

அமெரிக்க கடற்படை முற்றுகை காரணமாக ஈரானுக்கு கடும் பொருளாதார தாக்கம்

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை காரணமாக ஈரான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையால் ஈரானுக்கு தினமும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவிலிருந்து (Kharg Island) எண்ணெய் ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யவும் முடியாமல் நாடு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News, Uncategorized

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடர்வதற்காக, மேலும் ஒரு டீசல் கப்பல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது, வரவுள்ள கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் மற்றொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அந்தக் கப்பலில் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News, World News

தமிழக தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்குமாறு விஜய் அவசர கோரிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க விரும்பும் பொதுமக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பேருந்து நிலையங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாக நிறைவேற்றும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8.00 மணி வரை (மேலும் 2 மணி நேரம்)

Local News, News

பெயர் பொறித்த இலக்கத் தகடுகள் வருகிறதா? அறிமுகமாகிறது புதிய நடைமுறை!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அரசு நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் இந்த தகவல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள கணினி அமைப்பு மிகவும் பழமையானதாகவும், அதில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தற்போதைய கணினி அமைப்பை நவீனமயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மேம்படுத்தல் நிறைவடைந்த பின்னர், சுமார்

Local News, News

நாட்டில் மருந்து நெருக்கடி அபாயம் – அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரித்துள்ளது. இந்த மோசமான நிலையைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நடைமுறைசார் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் எனவும் சபை வலியுறுத்தியுள்ளது. உலகளவில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் கப்பல் கட்டண உயர்வுகள் விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரூபாயின் பெறுமதி சரிவு மற்றும் இறக்குமதி செலவுகளின் உயர்வு மருந்து இறக்குமதியில்

News, World News

“பாடசாலைகளில் போன் பயன்படுத்தினால்? இனி கடும் சட்ட நடவடிக்கை!”

இங்கிலாந்தில் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு, இனி சட்டமாக மாற்றப்பட உள்ளது. ‘சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம்’ தடையின்றி நிறைவேற்றப்படுவதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களும், சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித், பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், பாடசாலை

Local News, News

“மின்சார நெருக்கடி உண்மையா? அமைச்சர் நேரடி விளக்கம்”

நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாகவும், செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2025–2026 ஆண்டுக்கான நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மின்சார உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டாலும், அதன் சுமை மக்களிடம்

Astrology, News

இன்றைய ராசி பலன் 23 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 23, 2026 சித்திரை மாதம் 10ம் தேதி வியாழன் கிழமை, மிதுன, கடக   ராசியில் திருவாதிரை பின்பு புனர்பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று கஜலட்சுமி யோகம் நடக்கிறது. இன்று விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று வளர்பிறை சஷ்டி. இன்று ஏப்ரல் 23, 2026 வியாழன்கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 10ம் தேதி, மிதுன, கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

Local News, News

மே மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவு உதவி

டிட்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, மிக அவசரமான சில விசேஷ நிலைகளைத் தவிர, அனைத்து பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று (22) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்குவது அல்லது வீடு வாங்குவதற்காக 50 இலட்சம் ரூபாய்

Scroll to Top