
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தலைமையிலான தூதுக்குழுவின் இலங்கை அரச விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்த வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் உள்ளிட்ட பிரதிநிதிகள், தமது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து நேற்று (08) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, மக்கள் நலனுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
