
Public Utilities Commission of Sri Lanka 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று (09) அறிவித்துள்ளது.
அதன்படி, 180 அலகுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்கட்டணம் 18 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு எந்தவித கட்டண உயர்வும் அமல்படுத்தப்படமாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய மற்றும் எதிர்வரும் காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மின்சார உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் அரசாங்கம் வழங்கவுள்ள 15 பில்லியன் ரூபாய் மானியம் ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கட்டண உயர்வு சுமார் 5 சதவீத மின் நுகர்வோருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மீதமுள்ள 95 சதவீத நுகர்வோருக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
