வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளம் அஞ்சல் சேவை மையம், முத்திரைப் பிரிவு, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் மேம்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேல்தளத்தையும் மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும், சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
