
வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தீயணைப்பு படையினர் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உயிர்சேதம் அல்லது சொத்துச் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
