நாளை முதல் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழை அதிகரிப்பு – சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் உயர்வு

நீர்கொழும்பு முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அதேபோல், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையும், சிலாபம் முதல் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் அந்தக் கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top