
கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (17) பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு பத்தரமுல்லாவில் அமைந்துள்ள தலைமையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்று சேவைகள் வழங்கப்படமாட்டாது.
இன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டாம் என பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், விரைவில் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
