அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதலை நடத்திய நபர் யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தேகநபரை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
