கால்பந்து கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமான ‘சுப்பர் 32’ சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சுற்றில் உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் பல முன்னணி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஜேர்மனி – பராகுவே, பிரான்ஸ் – சுவீடன், தென்னாபிரிக்கா – கனடா, நெதர்லாந்து – மொரோக்கோ, போர்த்துக்கல் – குரோஷியா, ஸ்பெயின் – ஆஸ்திரியா, அமெரிக்கா – பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பெல்ஜியம் – செனகல், பிரேசில் – ஜப்பான், ஐவரி கோஸ்ட் – நோர்வே, மெக்சிக்கோ – ஈக்வடோர், இங்கிலாந்து – கொங்கோ, ஆர்ஜென்டினா – கேப் வேட், அவுஸ்திரேலியா – எகிப்து, சுவிட்சர்லாந்து – அல்ஜீரியா மற்றும் கொலம்பியா – கானா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
‘சுப்பர் 32’ சுற்று முதல் அனைத்து போட்டிகளும் நொக்-அவுட் முறையில் நடைபெறவுள்ளன. இதனால் தோல்வியடையும் அணி உடனடியாகத் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக அமையும் என விளையாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
