
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய அளவில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகளை அவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம், இலங்கை – அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
