
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ தரப்புகள் தெரிவித்துள்ளன.
காசா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களில் கான் யூனிஸ் நகரில் உள்ள காவல் நிலையம் அருகிலும், தற்காலிக முகாம்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுததாரி ஒருவரை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், டெய்ர் அல் பாலாஹ் பகுதியில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு அருகிலுள்ள சமூக சமையலறை மற்றும் ரொட்டி உற்பத்தி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள், ஹமாஸ் அமைப்பின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை பிரிவின் தளபதியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று, ஹமாஸ் ஆயுதப் பிரிவின் முக்கியத் தலைவர்களான இஸ்ஸு அல்-தின் அல்-ஹடாத் மற்றும் செயல்பாட்டு தலைமையக தளபதி பஹா பரூத் ஆகியோர் வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவமும் ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து காசா மீதான வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
