
இலங்கையில் சுமார் 40 சதவீத மக்கள் இன்னும் வரி வலையில் இணைக்கப்படவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை எந்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை என்று திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதனிடையே, பொதுமக்களிடம் வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘வரி வாரம்’ எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 5 மில்லியன் பேர் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறும் நடவடிக்கையில் இருப்பதாகவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
