
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Eelam People’s Democratic Party – EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் ரீதியான கைதுகள் உட்பட எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். அரசியல் வாழ்க்கையில் சவால்கள் இயல்பானவை என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த நிலைமையிலும் கட்சியின் செயற்பாடுகள் தடைபடாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால சேவைகளின் அடிப்படையில், தற்போதைய அரசியல் சூழலில் EPDP-யின் பங்கு மக்கள் மத்தியில் அதிகமாக உணரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கட்சியின் கொள்கைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுப்பவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, கட்சியின் அடுத்தகட்ட தலைமைத்துவத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கட்சியின் நலன் மற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மக்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
