தொழிலாளர்களுக்கான சமையல் எரிவாயு வழங்கல் இரட்டிப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ கிராம் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வழங்கலை இரட்டிப்பாக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

மக்கள் அடர்த்தி அதிகமான நகரங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமையல் சிக்கல்களைத் தணிப்பதுடன், அவர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

2026 மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பதிவான தினசரி சராசரி விநியோக அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, விநியோகத்தை இருமடங்காக அதிகரிக்குமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் சுமார் 300 மில்லியன் குடும்பங்கள் LPG விநியோகத்தில் சவால்களை எதிர்கொள்கின்றன. நாட்டின் LPG இறக்குமதியின் சுமார் 90% ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது. மேலும், 60%க்கும் அதிகமான குடும்பங்கள் தினசரி சமையலுக்கு LPG-ஐ நம்பியுள்ளன.

இந்த சிறப்பு விநியோக திட்டம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாநில அரசுகள் மூலம், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top