
பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இளங்குமரன், இந்த நிகழ்வு சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கலாம் என்றாலும், கலை மற்றும் கலாசாரத் துறையினருக்கு அது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கலைஞர் சட்ட சிக்கலில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமல்ல என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை பொறுப்புடன் கருத்து தெரிவிப்பது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.கலைஞர்களின் பங்களிப்பை மதிக்கும் சமூகமாக நாம் செயல்பட வேண்டும் என்றும், ஒரு தனிநபரின் பிரச்சினையை ஒட்டுமொத்த கலைத்துறையின் மீதான தாக்குதலாக மாற்றக் கூடாது என்றும் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், இளங்குமரனின் இந்தக் கருத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
