
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், படக்குழுவைச் சுற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பசில் ஜோசப் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பசில் ஜோசப், “நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். தற்போது அதன் விவரங்களை வெளிப்படுத்த முடியாது” என்று கூறியிருந்ததும் இந்த செய்திக்கு வலு சேர்க்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
