ஈரான் தொடர்பான போர் நிலைமையின் தாக்கத்தால், பனாமா கால்வாய் வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த முக்கிய நீர்வழியில், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை தொடரும் வரை இந்த அதிகரிப்பு நீடிக்கும் என விக்டர் வியல் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Strait of Hormuz மூடப்பட்டதன் பின்னர், ஈரான் கடற்கரை வழிப் போக்குவரத்தைத் தவிர்க்கும் நோக்கில் பல வணிகக் கப்பல்கள் மாற்று பாதைகளைத் தேர்வு செய்து வருகின்றன. இதன் காரணமாக, சரக்கு கப்பல்கள் பனாமா கால்வாய் வழியாக அதிகமாகச் செல்லத் தொடங்கியுள்ளன.
இந்த கால்வாயைக் கடக்க ஒரு கப்பலுக்கு சராசரியாக 300,000 முதல் 400,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மேலும், அவசர அனுமதி பெறுவதற்காக சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை செலுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
