அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி: ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடும் கட்டுப்பாடு

மூலோபாய ரீதியாக மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர்ச்சியான கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் அரச ஊடகமான IRIB வெளியிட்ட தகவலின்படி, ‘முற்றுகை’ என்ற பெயரில் அமெரிக்கா கடல்சார் கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது என ஈரானிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரானின் ஆயுதப்படைகளின் கடுமையான கண்காணிப்பும் நிர்வாகமும் கீழ் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் இருந்து புறப்படும் மற்றும் ஈரானை நோக்கி வரும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை அமெரிக்கா முழுமையாக உறுதி செய்யும் வரை, இந்தக் கட்டுப்பாடு தொடரும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top