இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த திருத்தத்தின் படி, பொதுவாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

  • பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து – ரூ. 30 அதிகரிப்பு
  • சிற்றுண்டி வகைகள் – ரூ. 10 அதிகரிப்பு
  • தேநீர் வகைகள் – ரூ. 5 அதிகரிப்பு

இவ்விலை உயர்வை அறிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், சமீபத்திய மின்சார கட்டண உயர்வின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம், பொதுமக்களின் தினசரி செலவினத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top