நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலும் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கம் உள்ளிட்ட அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.