
பரீட்சார்த்திகளின் வசதிக்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
பரீட்சைக் காலப்பகுதியில் பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் வழக்கமான கால அட்டவணைக்கு அமைய எவ்வித ரத்துகளுமின்றி இயக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பாதை பராமரிப்புப் பணிகள், உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
