
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழர் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எழுத்துமூல கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை நீக்கி தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை, இந்திய–ஈழத் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு, இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர் அகதிகளின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஷ் மற்றும் நடராஜர் காண்டீபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
