
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டின் மீன் சந்தைகளில் மீன்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
அவரின் தகவலின்படி, இன்று (10) நிலவரப்படி சந்தையில் மீன்களின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
- லின்னோ (சூரை) மீன் – ஒரு கிலோகிராம் ரூ. 1,300
- சாளை மீன் – ஒரு கிலோகிராம் ரூ. 800 முதல் ரூ. 900 வரை
- தலபத் மீன் – ஒரு கிலோகிராம் ரூ. 2,500
இந்த விலைகளிலேயே தற்போது சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
