
Kapila Chandrasena அவர்களின் இறுதிச் சடங்கு இன்று (10) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வதிவிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
SriLankan Airlines தொடர்பான எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணையில், மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த சூழலிலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டிற்குச் சேவையாற்றிய ஒருவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவே வந்துள்ளேன்” என தெரிவித்தார்.
மேலும், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவினால் தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அவர், குறிப்பிட்ட திகதியில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
எயார்பஸ் ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்குவதற்காக, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் Priyankara Jayaratne ஆகியோருக்கு எதிர்வரும் 12ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
