
தமிழகத்தில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தவெக, தற்போது கூட்டணி ஆதரவுகளின் மூலம் பெரும்பான்மை இலக்கை அணுகியுள்ளது.
முதலில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அறிவித்ததுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக உறுதிப்படுத்தியது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் தொடரும் எனக் கூறப்பட்ட ஐயூஎம்எல் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் திடீரென தவெகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெகவிற்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் விசிகவின் இறுதி நிலைப்பாடு வெளியாகாத நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இணையவழி ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசிக ஆதரவு வழங்குமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த அரசியல் பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆட்சியமைப்பு, பதவியேற்பு மற்றும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், தமிழக அரசியலில் புதிய திருப்பம் உருவாகலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
