மார்ச் மாதம் போரின் தொடக்கத்திலிருந்து, ஹோர்முஸ் நீரிணை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த போதிலும், கடல்சார் தரவுகள் சுமார் 90 கப்பல்கள் பாதுகாப்பாக இந்த பாதையை கடந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

லொயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் கூறியதுபோல், ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளின் தடைகளை தவிர்க்க தங்களது இருப்பிடத்தை மறைக்கும் “மர்ம” கப்பல்கள் ஆகும். ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களே இந்த பாதையை பயன்படுத்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
போரின் சூழலிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஈரான் 16 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்யை அதிகளவு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் முக்கிய கொள்வனவாளராக சீனா உள்ளது, இதன் மூலம் ஈரான் தற்காலிகமாக தனது பொருளாதாரத்தை நிலைநாட்டியுள்ளது.
இந்தியாவின் ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ எரிவாயு கப்பல்கள், பாகிஸ்தானின் ‘கராச்சி’ எண்ணெய் கப்பலும் சமீபத்தில் பாதுகாப்பாக நீரிணையை கடந்துள்ளன. இதற்கு பின்னணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளின் ஈரானுடன் நடைபெற்ற இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளாகும்.
சில கப்பல்கள் ஈரானிய தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, தாங்கள் சீனாவோடு தொடர்புடையவர்கள் அல்லது சீன மாலுமிகளை கொண்டவர்கள் என பொய்யாக அறிவித்து இந்த பாதையை பயன்படுத்துகின்றன.
உலக சந்தையில் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு நீரிணையை கடக்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “உலகிற்கு எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவே ஈரானிய கப்பல்களை அனுமதிக்கிறோம்” என தெரிவித்தார்.
இதுவரை, போரின் தாக்கத்தால் மசகு எண்ணெய் விலை 40% அதிகரித்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
