திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
