நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி, மின்சார பயன்பாட்டு அளவினைப் பொறுத்து கட்டண உயர்வு விகிதங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
- 30 அலகுகளுக்கு கீழ் – 4.3% உயர்வு
- 30 முதல் 60 அலகுகள் – 6.9% உயர்வு
- 61 முதல் 90 அலகுகள் – 6.9% உயர்வு
- 91 முதல் 180 அலகுகள் – 7.2% உயர்வு
- 180 அலகுகளுக்கு மேல் – 25% உயர்வு
இதன் அடிப்படையில், கட்டண உயர்வின் பண மதிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது:
- 30 அலகுகள் வரை – ரூ. 15 அதிகரிப்பு
- 30–60 அலகுகள் – ரூ. 45 அதிகரிப்பு
- 61–90 அலகுகள் – ரூ. 120 அதிகரிப்பு
- 91–180 அலகுகள் – ரூ. 420 அதிகரிப்பு
இந்த கட்டண உயர்வு பொதுமக்களின் வாழ்கைச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.