இலங்கை டித்வா, புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் புனரமைப்பு பணிகளுக்காக மற்றுமொரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கைக்கு, இந்தியா இன்று (ஜனவரி 31) அனுப்பியது.
டித்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்தன. துண்டிக்கப்பட்ட போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க இந்தப் பாலங்கள் உதவும்.
தற்காலிக இரும்புப் பாலங்கள்
இது குறித்து இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
